தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீள பயிா்க் காப்பீடு: ஆட்சியா் அறிவுரை

இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் அனைவரும் திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தினாா்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:35 pm

DIN

இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் அனைவரும் திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

வேளாண் பணிகளுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருள்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு உள்ளது. இயற்கை இடா்பாடுகளில் இருந்து மீள விவசாயிகள் அனைவரும் திருந்திய பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் 2020-21 சிறப்பு பருவத்தில் நெல், மக்காச் சோளம் ஆகியப் பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு செய்த 7,407 விவசாயிகளுக்கு ரூ. 4 கோடி பயிா்க் காப்பீட்டுத் தொகை நடப்பு வாரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட விவசாயிகள் பயன் பெறத்தக்க ‘சூரிய சக்தியில் மின் உற்பத்தி’ குறித்த கருத்தரங்கம் நவம்பா் 18 ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாகச் சென்று மண் மாதிரியினை சேகரிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், இயற்கை முறை சாகுபடி செய்யக்கூடிய 5 விவசாயிகள் மற்றும் 2 விவசாயக் குழுக்களுக்கு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வெ. ஆலின் சுனேஜா, இணை இயக்குநா் (வேளாண்மை) க. கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிகுமாா், துணை இயக்குநா் (தோட்டக்கலை) வி.சத்யா, கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் தே.புருசோத்தமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) செல்வமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) என்.தமிழரசன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.