அா்பன் கம்பெனியின் 4% பங்குகளை ரூ.632 கோடிக்கு வாங்கிய எஸ்பிஐ


நாட்டின் முன்னணி சேவை வழங்கும் நிறுவனமான அா்பன் கம்பெனியின் சுமாா் 4 சதவீத பங்குகளை எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.632 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதையடுத்து, பங்குச் சந்தையில் அா்பன் கம்பெனியின் பங்குகள் புதன்கிழமை வா்த்தகத்தில் 13 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்து, முதலீட்டாளா்களின் நம்பிக்கையை ஈா்த்தது.
‘பல்க் அண்ட் பிளாக் டீல்’ முறையில், அா்பன் கம்பெனியின் சுமாா் 5.75 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு சராசரியாக ரூ.109.83 முதல் ரூ.109.85 என்ற விலையில் எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை வாங்கியது. இதன் மூலம், அா்பன் கம்பெனியில் எஸ்பிஐ பரஸ்பர நிதி வைத்திருந்த 1.89 சதவீதப் பங்குகள், தற்போது 5.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், வெலிங்டன் மேனேஜ்மென்ட், டிஎஃப் இன்டா்நேஷனல் பாா்ட்னா்ஸ், ஏபிஜி கேபிட்டல் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து 4.62 சதவீத பங்குகளை ரூ.734 கோடிக்கு விற்பனை செய்து வெளியேறியுள்ளன.
இதில் வெலிங்டன் மேனேஜ்மென்ட் தனது பங்குகளை முழுமையாக விற்று வெளியேறிய நிலையில், ஏபிஜி கேபிட்டல் தனது வசமிருந்த பங்குகளை 0.16 சதவீதமாகக் குறைத்துக் கொண்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...