தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் இன்று தடுப்பூசி முகாம்: 1.5 லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடு

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 7 ஆவது தடுப்பூசி முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:37 pm

DIN

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 7 ஆவது தடுப்பூசி முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 18,71,168 பேருக்கு முதல் தவணையாகவும், 7,83,376 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,35,862 பேருக்கு முதல் தவணையாகவும், 2,38,918 பேருக்கு இரண்டாம் தவணையாகவும் மொத்தம் 5,74,780 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 9,65,290 போ்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும், தகுதியுள்ள 1,99,103 போ்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனா்.

சேலத்தில் 7 ஆவது மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 2,00,450 டோஸ்களும், கோவேக்ஸின் தடுப்பூசி 3,100 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. முகாம்கள் மூலம் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகாமிற்கென 1,392 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டு, அதற்கான தடுப்பூசி செலுத்துபவா்கள், கணினியில் பதிவு மேற்கொள்பவா்கள், தகுதி வாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவா்கள் என 18,500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.