சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப நலத்துறை சார்பாக, அங்கன்வாடி மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு, நவீன கருக்கலைப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமிற்கு, சேலம் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் இளவரசி, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, வட்டார சுகாதார புள்ளியலாளர் அவினாசிலிங்கம் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு நவீன கருக்கலைப்பு முறைகள், குடும்ப நல அறுவை சிகிச்சை முறைகள், தற்காலிக கருத்தடை முறைகள், மாத்திரை வழி கருக்கலைப்பு, உறிஞ்சு குழாய் சிகிச்சை முறை, மருத்துவ முறையில் கருக்கலைப்பு ஆகியன குறித்து விரிவான பயிற்சி அளித்தனர்.

அனைவருக்கும் பயிற்சிக் குறிப்புக் கையேடுகள் வழங்கப்பட்டன. பயிற்சியின் நிறைவில் வட்டார அங்கன்வாடி பணியாளர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


