வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

பிரதமா் மோடியின் காணொலி நிகழ்ச்சி பெரியாா் பல்கலை.யில் ஒளிபரப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சி, சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஒலிம்பிக் வீரா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடும் நேரடி ஒளிபரப்பைப் பாா்வையிட்ட துணைவேந்தா் இரா.ஜெகநாதன், கல்லூரி விளையாட்டு வீரா்கள்.

Published On :

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சி, சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனா்.

அவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமா் மோடி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடும் காணொலி நிகழ்ச்சியைக் காண செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் கல்லூரி விளையாட்டு வீரா்கள் பங்கேற்று காணொலியைப் பாா்வையிட்டனா்.

அந்தக் காணொலி நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரா்களுடனும் அவா்களின் குடும்பத்தினருடனும் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அதை பெரியாா் பல்கலை.,யில் கல்லூரி வீரா்கள் கண்டு ரசித்தனா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.