சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அக்கமாபேட்டையில் பொதுநல அமைப்புகளின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா 

காந்தி ஜெயந்தியையொட்டி சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள காந்திசிலை வளாகத்தில் காந்திஜி பொதுநலச் சங்கம், சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சனிக்கிழமை  நடைபெற்றது.

News image

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பொதுநல அமைப்பினர்

Updated On :2 அக்டோபர் 2021, 3:40 pm IST

காந்தி ஜெயந்தியையொட்டி சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள காந்திசிலை வளாகத்தில் காந்திஜி பொதுநலச் சங்கம், சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சனிக்கிழமை  நடைபெற்றது. 

அக்கமாபேட்டை  அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.நடராஜன் தலைமை வகித்து காந்தியின் கொள்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். 

சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் தலைவி டி.ஹெலினா கிறிஸ்டோபர், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கே.கே.நடேசன் ஆகியோர் மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

அக்கமாபேட்டை காந்திஜி பொதுநலச்சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.கே.முனியப்பன் முன்னிலை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். 

ரோட்டரி  சங்க செயலர் என்.தியாகராஜன், பொருளாளர் கே.செந்தில்குமார், ரோட்டரி மாவட்ட கல்விக் குழுத்தலைவர் எ.வெங்கடேஸ்வரகுப்தா, முன்னாள் தலைவர்கள் கௌதம் வெங்கடாஜலம், சி.கே.ஆர்.ராமசாமி, நிர்வாகிகள் காத்திகேயன்,  பெர்ஸியா,  சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் பி.சி.மணி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிர்வாகி பசுமை சீனிவாசன், வழக்குரைஞர் ராஜேந்திரன், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை துணைத்தலைவர் பொன்.பழனியப்பன், செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் எஸ்.சி.ராமசாமி, நிர்வாகிகள் சீனிவாசன், கிஷோர்பாபு, அமுதச்சுடர் அறக்கட்டளைத் தலைவர் வி.சத்தியபிரகாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.