சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

புதிய ரயில் திட்டங்கள் ஏதும் இல்லை: புதுவையில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் பேட்டி

புதுச்சேரி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மனீஷ் அகர்வால் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

News image

புதிய ரயில் திட்டங்கள் ஏதும் இல்லை: திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் பேட்டி

Updated On :2 அக்டோபர் 2021, 3:29 pm IST

புதுச்சேரி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மனீஷ் அகர்வால் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடை மேடைகள், டிக்கெட் கொடுக்கும் இடம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் பரிசோதகர் அறை, நீட்டிக்கப்பட உள்ள சர்வீஸ் லைன் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.  அப்போது ரயில் நிலைய கண்காணிப்பாளர் தங்கராசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி முக்கியமான ஒரு ரயில் நிலையமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக் கூடிய இடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதனால் இங்கு என்ன வசதிகள் உள்ளது. மேலும், என்ன வசதிகள் ஏற்படுத்தி தரலாம் என்று ஆய்வு செய்தேன். ஏற்கெனவே பல வசதிகள் உள்ளது. இருப்பினும், கூடுதலாக சில வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய திட்டங்கள் ஏதும் தற்போது இல்லை. புதுச்சேரி-கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. காரைக்கால் – பேரளம் ரயில் பாதை அமைக்கும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாநில அரசு தொடர்பான சில பிரச்னைகள் உள்ளன. அதனால் பணிகள் முழுமை பெறவில்லை. இதுதொடர்பான மாநில அரசுடன் பேசி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.