ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

புதிய ரயில் திட்டங்கள் ஏதும் இல்லை: புதுவையில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் பேட்டி

புதுச்சேரி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மனீஷ் அகர்வால் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

புதிய ரயில் திட்டங்கள் ஏதும் இல்லை: திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் பேட்டி

Published On :28 ஜனவரி 2024, 9:47 am IST

புதுச்சேரி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மனீஷ் அகர்வால் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடை மேடைகள், டிக்கெட் கொடுக்கும் இடம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் பரிசோதகர் அறை, நீட்டிக்கப்பட உள்ள சர்வீஸ் லைன் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.  அப்போது ரயில் நிலைய கண்காணிப்பாளர் தங்கராசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி முக்கியமான ஒரு ரயில் நிலையமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக் கூடிய இடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதனால் இங்கு என்ன வசதிகள் உள்ளது. மேலும், என்ன வசதிகள் ஏற்படுத்தி தரலாம் என்று ஆய்வு செய்தேன். ஏற்கெனவே பல வசதிகள் உள்ளது. இருப்பினும், கூடுதலாக சில வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய திட்டங்கள் ஏதும் தற்போது இல்லை. புதுச்சேரி-கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. காரைக்கால் – பேரளம் ரயில் பாதை அமைக்கும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாநில அரசு தொடர்பான சில பிரச்னைகள் உள்ளன. அதனால் பணிகள் முழுமை பெறவில்லை. இதுதொடர்பான மாநில அரசுடன் பேசி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.