சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கூத்தாநல்லூரில் 5 இடங்களில் கிராம சபைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 5 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image

கூத்தாநல்லூரில் 5 இடங்களில் கிராம சபைக் கூட்டம்

Updated On :2 அக்டோபர் 2021, 3:23 pm IST

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 5 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், கூத்தாநல்லூர் பிர்க்காவில் 17, கமலாபுரம் பிர்க்காவில் 15 மற்றும் வடபாதிமங்கலம் பிர்க்காவில் 23 என 55 கிராமங்கள் உள்ளன.

இதில், ஆய்குடி, அதங்குடி, பொதக்குடி, சித்தாம்பூர் மற்றும் வெள்ளக்குடி உள்ளிட்ட 5 கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீடாமங்கலம் ஒன்றியம்,  சித்தாம்பூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரெத்தினம்வேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ஜெயபால் முன்னிலை வகித்தார்.

6 ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜீவிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவர் ப.முருகையன் பங்கேற்றார். குடிதாங்கிச்சேரி தமிழர் தெரு பிடாரி அம்மன் குளம், பெரியக்குளம், கள்ள வாழாச்சேரி சின்னக்குளம், திருவாசகம் குளம் உள்ளிட்ட குளங்களில் படித்துறை அமைக்க வேண்டும்.

சுடுகாடு மயானக் கொட்டகை அமைக்கப்பட வேண்டும். கள்ள வாழாச்சேரி சுடுகாட்டுக்குச் சாலை அமைக்க வேண்டும். அகம்படையான் ஆற்றின் குறுக்கே உள்ள தட்டிப் பாலத்தை அகற்றி விட்டு, இரும்புப் பாலம் கட்டப்பட வேண்டும். வடக்குத் தெரு சுடுகாட்டுச் சாலையை தார்ச் சாலையாக அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம மக்கள் முன்னிலையில், ஊராட்சி செயலாளர் டி.மோகன் வாசித்தார்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் டி.முருகானந்தம், இரா.பிரபாகரன், ஜெ.கலா, எம்.ரேணுகா உள்ளிட்ட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.