டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணையின் 88ஆண்டுகால வரலாற்றில் இன்று 67-வது ஆண்டாக அணை நீர்மட்டம் 100அடியை எட்டியது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:26 am

DIN

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணையின் 88ஆண்டுகால வரலாற்றில் இன்று 67-வது ஆண்டாக அணை நீர்மட்டம் 100அடியை எட்டியது. 

கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 13,447 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 39,634கன அடியாக அதிகரித்தது. நேற்று மழை சற்று தணிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,650கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

Story image

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 95.10அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் எண்பத்தி எட்டு ஆண்டு கால வரலாற்றில் அறுபத்து ஏழாவது ஆண்டாக இன்று 100 அடியை எட்டியது. கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5அடி உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 64.84 டி.எம்.சியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும் மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Story image

அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்ததை அடுத்து அணையின் இடது கரையில் 16 கண் மதகு அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து மலர் தூவி காவிரி தாயை வணங்கினார்கள். கடந்த மார்ச் மாதம் இருபத்தி ஏழாம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது தற்போது 210 நாட்களுக்கு பிறகு மீண்டும் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.