வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேட்டூர் அருகே விவசாயி கிணற்றில் விழுந்த யானை பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நீதி புத்தில் வட பர்கூர் வனப்பகுதி சென்னம்பட்டி வனச் சரகத்தில் இருந்து வழி தவறி வந்த யானை

News image
கோப்புப்படம்
Updated On :4 ஏப்ரல் 2022, 5:45 am

DIN

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நீதி புத்தில் வட பர்கூர் வனப்பகுதி சென்னம்பட்டி வனச் சரகத்தில் இருந்து வழி தவறி வந்த யானை மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்ட கிணற்றில் விழுந்துள்ளது. 

அதிகாலையில் யானை விழுந்ததால் ஆண் யானையா? பெண் யானையா? என்பது தெரியவில்லை. வனத்துறையினர், தீயணைப்பு படையினர் மூலம் கிணற்றில் உள்ள நீரை இறைத்து யானையின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். கிணற்றில் விழுந்த யானை கடந்த ஒரு வருடமாக விவசாயிகளுக்கு தொல்லை தந்து வந்த யானையா? அல்லது புதிய யானையா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

கிணற்றில் விழுந்த யானையை பார்க்க நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.