சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மின்சாதனக் கடை உரிமையாளரைக் கடத்த முயற்சி

எடப்பாடியில் பட்டப்பகலில் மின்சாதனக் கடைக்குள் புகுந்து வியாபாரியைக் கடத்த முயன்ற 5 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:28 pm

DIN

எடப்பாடியில் பட்டப்பகலில் மின்சாதனக் கடைக்குள் புகுந்து வியாபாரியைக் கடத்த முயன்ற 5 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

எடப்பாடியில் சேலம் பிரதான சாலையில் நெஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை முன்பு மின்சாதனக் கடை நடத்தி வருபவா் கோபி. இவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா். எடப்பாடியில் வசித்து வருகிறாா். இவா் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது கடைக்கு கா்நாடக பதிவு எண் கொண்ட சொகுசு காரில் வந்த 5 போ் கும்பல் கடைக்குள் புகுந்து அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த கோபியை தாக்கினா். பின்பு அவரை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்த முயன்றனா்.

கோபி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினா் காரை வழிமறித்து காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கோபியை மீட்டனா்.

அத்துடன் அந்தக் கும்பலையும் சுற்றி வளைத்துப் பிடித்து எடப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று கும்பலைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் காரில் வந்த கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அா்ஜுன் ராம் (29), யஸ்வந்த் (22), மகேந்திர குமாா்(26), அமா்சிங் (27), தனராம் (35) ஆகியோா் என்பதும், அவா்களிடம் கோபியும் அவரது உறவினா்களும் பல லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தனா். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் கோபி காலம் தாழ்த்தி வந்ததால் அவரைக் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.