மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கலந்துகொண்டார்.
இதில், கல்வியில் இடதுசாரி அல்லது வலதுசாரி சித்தாந்தம் என்ற தலைப்பில் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:
''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட 5 துறைகளில் மைல்கல் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை இடதுசாரிகளின் அழுத்தத்தால் நடந்துள்ளது.
கேரளத்தையும் மாநிலங்களையும் ஒப்பிட விரும்பினால், சமூக நிலையில் அடைந்துள்ள சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். குஜராத் ஒரு வளமான மாநிலமாக அறியப்படுகிறது. ஆனால், சமூகரீதியாக அந்த மாநிலம் பின்தங்கியுள்ளது.
குஜராத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 15 ஆயிரமாக இருக்கும். கேரளத்தில் 7 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இந்த வித்தியாசத்திற்கும் மக்கள் தொகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. குஜராத்தை விட சென்னையில் மக்கள்தொகை அதிகம்.
குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் அமெரிக்காவுக்கு ஒரு படி முன்னோடியாக உள்ளது கேரளம். டபுள் என்ஜின் மாநிலமான உத்தரப் பிரதேசத்தை விட சுகாதாரத்தில் கேரளம் மேம்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (விபி ஜி ராம் ஜி), பிஎம் ஸ்ரீ பள்ளி போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பெரிதாக மாநிலங்களின் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. கேரளத்தில் உள்ள பள்ளிகள் உலக தரத்திலான பள்ளிகளுடன் போட்டியிடும் தகுதியை ஏற்கெனவே கொண்டுள்ளது.
தொழில் முதலீடுகளைக் காட்டிலும் கல்வியிலும் சுகாதாரத்திலும் அதிக அளவிலான முதலீடுகளை கேரள அரசு செய்து வருகிறது'' எனக் குறிப்பிட்டார்
Summary
ThinkEdu conclave 2026 CPI-M MP John Brittas
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்ணதாசன் பாடல்களில் சமூகத்தின் மீதான அக்கறை வெளிப்படும்: தமிழருவி மணியன்

தவெக அமைச்சர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை! தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்! | TVK | BJP

சிறு விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

இளம் தலைமுறையினரிடம் சமூக சிந்தனை மேலோங்க வேண்டும்! - தமிழறிஞா் சாலமன் பாப்பையா
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



