விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத்: ஜான் பிரிட்டாஸ்

கல்விச் சிந்தனை அரங்கில் ஜான் பிரிட்டாஸ் பேசியது குறித்து...

News image
ஜான் பிரிட்டாஸ்
Updated On :2 மார்ச் 2026, 1:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கலந்துகொண்டார்.

இதில், கல்வியில் இடதுசாரி அல்லது வலதுசாரி சித்தாந்தம் என்ற தலைப்பில் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:

''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட 5 துறைகளில் மைல்கல் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை இடதுசாரிகளின் அழுத்தத்தால் நடந்துள்ளது.

கேரளத்தையும் மாநிலங்களையும் ஒப்பிட விரும்பினால், சமூக நிலையில் அடைந்துள்ள சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். குஜராத் ஒரு வளமான மாநிலமாக அறியப்படுகிறது. ஆனால், சமூகரீதியாக அந்த மாநிலம் பின்தங்கியுள்ளது.

குஜராத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 15 ஆயிரமாக இருக்கும். கேரளத்தில் 7 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இந்த வித்தியாசத்திற்கும் மக்கள் தொகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. குஜராத்தை விட சென்னையில் மக்கள்தொகை அதிகம்.

குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் அமெரிக்காவுக்கு ஒரு படி முன்னோடியாக உள்ளது கேரளம். டபுள் என்ஜின் மாநிலமான உத்தரப் பிரதேசத்தை விட சுகாதாரத்தில் கேரளம் மேம்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (விபி ஜி ராம் ஜி), பிஎம் ஸ்ரீ பள்ளி போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பெரிதாக மாநிலங்களின் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. கேரளத்தில் உள்ள பள்ளிகள் உலக தரத்திலான பள்ளிகளுடன் போட்டியிடும் தகுதியை ஏற்கெனவே கொண்டுள்ளது.

தொழில் முதலீடுகளைக் காட்டிலும் கல்வியிலும் சுகாதாரத்திலும் அதிக அளவிலான முதலீடுகளை கேரள அரசு செய்து வருகிறது'' எனக் குறிப்பிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.