ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இயற்கை பராமரிப்பில் உள்ளூர் மக்கள் பங்கு முக்கியமானது : சுப்ரியா சாஹு

கல்விச் சிந்தனை அரங்கில் சுப்ரியா சாஹு பேசியது குறித்து...

News image
கல்விச் சிந்தனை அரங்கில் சுப்ரியா சாஹு
Updated On :2 மார்ச் 2026, 11:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயற்கையை பராமரிப்பதில் உள்ளூர் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கலந்துகொண்டார்.

இதில், பூமியை வென்றெடுத்தல் : எதிர்காலத்தைக் காப்பாற்றுதல் என்ற தலைப்பில் சுப்ரியா சாஹு கலந்துகொண்டு பேசியதாவது:

''எந்தவொரு வளர்ச்சியின் அடிப்படையும் மேம்படும் நிலைத்தன்மையில் வேரூன்றியிருக்க வேண்டும்.

நீங்கள் உண்மையிலேயே ஒரு சக்திவாய்ந்த நாடாக இருக்க விரும்பினால், சக்தி வாய்ந்த டிரில்லியன் பொருளாதார நாடாக இருக்க விரும்பினால், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தில் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

உள்ளூர் மக்களின் மனநிலையை என் ஆராய்ச்சிக் குழுவினர் துல்லியமாகக் கண்டறியும் திறமை உடையவர்கள். மாங்குரோவ் காடுகளின் பராமரிப்பில் உள்ளூர் மக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது.

மீன்களின் எலும்புகளைப் போன்று மாங்குரோவ் காடுகளின் தன்மை உள்ளது. இது இயற்கையின் அதிசயம். உள்ளூர் மக்களின் உள்ளீடுகளை மாங்குரோவ் காடுகளில் தமிழக வனத் துறை செயல்படுத்தியுள்ளது. இது குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் அளித்துள்ளது'' எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.