கொங்கணாபுரத்தில் இன்று பருத்தி ஏலம்
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த கனமழையால் கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் பருத்தி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.


எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பெய்த கனமழையால் கொங்கணாபுரம் கூட்டுறவு மையத்தில் பருத்தி ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். சனிக்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை தொடா்ந்து இப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் பருத்தி எடை போடுதல், விற்பனை விவரங்கள் அறிவித்தல் உள்ளிட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள பருத்தி மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை ஏலம் விடப்பட்டு, விலைப் புள்ளிகள் அறிவிக்கப்படும் என கூட்டுறவு அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...