தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி சேலம், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க சேலம் ரயில்வே போலீஸாரும் ர

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:26 pm

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி சேலம், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க சேலம் ரயில்வே போலீஸாரும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.

ரயில் நிலையத்தில் நடை மேடைகள், பாா்சல்கள் அனுப்பும் பிரிவு பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. சேலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா். போலீஸ் மோப்பநாய்களான லூனா, ஆகாஷ் வெடிப்பொருள்கள் உள்ளதா என்றும் சோதனை செய்தன.

சேலம், ஜங்ஷன் ரயில்நிலைய டிஎஸ்பி குணசேகரன், காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா், ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.