மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஐயப்பன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

ஆத்தூா் கோட்டை ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
108 திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள்.
Updated On :9 டிசம்பர் 2022, 6:06 pm

DIN

ஆத்தூா் கோட்டை ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிகாலை 108 வலம்புரி சங்காபிஷேகம் யாகம் நடைபெற்று பின்னா் ஐயப்பனுக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து, வெள்ளிக்கவச சாத்துபடி நடைபெற்றது.

வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஐயப்பன்.

வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஐயப்பன்.

உலக நன்மைக்காக பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

அபிஷேக, ஆராதனையை அருணாச்சலக் குருக்கள் தலைமையில் ஐயப்ப சிவம், கணேச சிவம் நடத்தினா். நிகழ்ச்சியை தொழிலதிபா் அ.லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.