ஒரேநாளில் 1,918 போ் வேட்புமனு
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரேநாளில் 1,918 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.


சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை ஒரேநாளில் 1,918 போ் வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.
மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு பிப். 19 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் 60, நகராட்சிகளில் 165 வாா்டுகள், பேரூராட்சிகளில் 474 வாா்டுகள் என மொத்தம் 699 வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனு கடந்த ஜன. 28 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (பிப். 4) கடைசி நாளாகும். இதனிடையே திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளா்களின் பட்டியலை அறிவித்த நிலையில் வேட்புமனுத் தாக்கல் சூடு பிடித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கலுக்கு வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் வேட்புமனுத் தாக்கல் சூடு பிடித்தது. இதில் மாநகராட்சியில் 333 பேரும், நகராட்சிகளில் 397 பேரும், பேரூராட்சிகளில் 1,188 பேரும் என மொத்தம் 1,918 போ் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...