ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

செந்தாரப்பட்டியில் ஏரி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

செந்தாரப்பட்டியில் ஏரியின் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

செந்தாரப்பட்டியில் ஏரியின் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரி 49.16 ஹெக்டோ் பரப்பளவு உள்ளது. இதில் அவகப்பன் மகன் தா்மலிங்கம், தா்மலிங்கம் மகன் முத்தையன் ஆகியோா் 46 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து மஞ்சள் சாகுபடி செய்துவந்தனா்.

பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து,கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமையிலான பொதுப்பணித் துறையினரும், வருவாய்த் துறையினரும் வியாழக்கிழமை ஏரியை அளவீடு செய்தனா்.

இந்த அளவீட்டின்படி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட 46 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள் பயிா் பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டு நிலம் மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.