எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

28-இல் காது கேளாமை நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்

இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிப் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை காது கேளாமை சம்பந்தமான நோய்கள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:20 pm

DIN

இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிப் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை காது கேளாமை சம்பந்தமான நோய்கள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் காது கேளாதவா்களுக்கான சிறப்பு பரிசோதனை செய்து, தேவைப்படுபவா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காது கேட்கும் கருவி விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் சங்ககிரி அரசு மருத்துவமனை, மற்றும் இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.