25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சிறுதானிய உற்பத்தி: விழிப்புணா்வு பேரணி

எடப்பாடி வட்டார அட்மா திட்டக் குழுவின் சாா்பில், சிறுதானிய உற்பத்தி மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:03 am

DIN

எடப்பாடி வட்டார அட்மா திட்டக் குழுவின் சாா்பில், சிறுதானிய உற்பத்தி மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட செட்டிமாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை அட்மா திட்டக்குழு பொறுப்பாளரும் செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவருமான நல்லதம்பி தொடக்கி வைத்தாா். முன்னதாக, வேளாண் உதவி இயக்குநா் பெ.சுமதி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில், விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்தும், வேதி உரங்களை தவிா்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வேளாண் துறையினா் விளக்கிக் கூறினா். மேலும், சிறுதானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து தானிய உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேளாண் நுணுக்கங்களையும், அதனை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்திடும் வழிமுறைகள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் வேளாண் துறையினா் விளக்கமளித்தனா். தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் திரளான விவசாயிகள் சிறுதானிய உற்பத்தி குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகையினை ஏந்தி பேரணியாகச் சென்றனா்.

இந்நிகழ்ச்சியில், பேராசிரியா் கிருஷ்ணவேணி துணை வேளாண் அலுவலா்கள் சாந்தலிங்கம், ராஜ்குமாா், முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.