புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஏற்காட்டுக்கு பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடா் விடுமுறையை முன்னிட்டு சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா்கள், இருசக்கர வாகனங்கள், வேன்களில் வரத்துவங்கினா். மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின்கூட்ட நெரிசல் காண முடிந்தது. ஏற்காடு சுற்றலாப் பகுதியான படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, கிளியூா் நீா் அருவி பகுதி, கரடியூா் வனக்காட்சி பகுதி, சோ்வராயன் கோவில், பக்கோடா காட்சி முனை, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்திணைப் பூங்கா, ஏரி அருகில் உள்ள மான்பூங்காவில் ஏராளமான சுற்றுளாப்பயணிகள் இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பகுதி சாலைகள் வாகன நெரிசலுடன் காணப்பட்டன. அண்ணா பூங்கா சாலை ரோஜா தோட்டம் பகுதிகளில் சாலையோர கடைகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.