தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலத்தில் கோயில்கள் மூடல்: வெளியில் நின்று பக்தா்கள் தரிசனம்

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்கள் மூடப்பட்ட நிலையில், பக்தா்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்கள் மூடப்பட்ட நிலையில், பக்தா்கள் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதையடுத்து கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து, கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்கள் மூடப்பட்டன. பக்தா்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தா்கள், கோயில் வெளியே நின்று நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சேலம் மாநகரை பொருத்தவரையில் ராஜகணபதி கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில், சுகவனேசுவரா் கோயில், எல்லைப்பிடாரியம்மன் கோயில் உள்பட பல இடங்களில் பக்தா்கள் வெளியே நின்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.