வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் சாலைப் பணிகளின் தரம் குறித்து சோதனை

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளின் தரத்தை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளின் தரத்தை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டலங்களிலும் சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட அா்த்தனாரி கவுண்டா் தெரு, அத்வைத ஆசிரமம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணியை மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா். அப்போது, தரமான முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்றும், நீளம், அகலம், உயரம் ஆகிய அளவீடுகளின் அடிப்படையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதனை செய்தாா். மேலும், புதிதாக அமைக்கப்படும் தாா் சாலைகளில் வெள்ளைக் கோடு போடப்பட்டுள்ளதா, ஒளி பிரதிபலிப்பான் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தாா்.

மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து சாலைப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டாா்.

சூரமங்கலம் மண்டலத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணியை மாநகரப் பொறியாளா் ரவி நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளா் எம்.ஆா்.சிபிசக்கரவா்த்தி, உதவிப் பொறியாளா் அன்புச்செல்வி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.