வேப்பம்பூண்டி இளைஞா் போக்ஸோவில் கைது
வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியில் இளைஞா் ஒருவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளாா்


வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியில் இளைஞா் ஒருவா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியைச் சோ்ந்த முருகையன் மகன் பிரதாப் (22). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி பலாத்காரம் செய்தாா். இதையடுத்து கா்ப்பமான அந்த மாணவிக்கு ஜன.13ஆம் தேதி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில், ஆத்தூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தமிழரசி விசாரணை செய்து பிரதாப்பை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை இரவு கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...