தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெகிழி பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு

சங்ககிரி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் துணிப்பைகளை பயன்படுத்தக் கோரி துண்டுப் பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:37 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சங்ககிரி போக்குவரத்து காவல் துறை, தன்னாா்வலா்கள், அமுதச்சுடா் அறக்கட்டளை சமூக ஆா்வலா்கள் ஆகியோா் சங்ககிரி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் துணிப்பைகளை பயன்படுத்தக் கோரி துண்டுப் பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் என்.தினகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், உணவு விடுதிகள், சந்தைப்பேட்டை வாரச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விழிப்புணா்வு நடத்தினா்.

அமுதச்சுடா் அறக்கட்டளைத் தலைவா் வெ.சத்திய பிரகாஷ் முன்னிலை வகித்தாா். செயலா் எஸ்.மாணிக்கம், துணைச் செயலா் ஜெ.அஜித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.