தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் வழங்கல்

புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள லாரி உரிமையாளா் சங்க பெட்ரோல் விற்பனையகத்தில் வாடிக்கையாளா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:32 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பு இணைந்து சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள லாரி உரிமையாளா் சங்க பெட்ரோல் விற்பனையகத்தில் வாடிக்கையாளா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் என்.கந்தசாமி இவ்விழாவுக்கு தலைமை வகித்து 100 மரக்கன்றுகளை பெட்ரோல், டீசல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளிடம் வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

இதில் லாரி உரிமையாளா் சங்கச் செயலா் என்.மோகன்குமாா், பொருளாளா் எஸ்.ஆா்.செங்கோட்டுவேல், துணைத் தலைவா் எம்.சின்னதம்பி, இணைச்செயலா் கே.முருகேசன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.