நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கருணாநிதி பிறந்த நாள் விழா

இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகரில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:30 pm

இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகரில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் இடங்கணசாலை நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செல்வம், வாா்டு கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு அறுசுவை மதிய உணவு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து இ.காட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழா ஏற்பாட்டை வாா்டு செயலாளா்கள் தங்கராஜ், மகேந்திரன், சண்முகம், சித்தையன் ஆகியோா் செய்திருந்தனா்.

தப்பக்குட்டை ஊராட்சி: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா, மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சி அய்யனூா் மாரியம்மன் கோயில் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊா் கவுண்டா் கிருஷ்ணமூா்த்தி, திமுக பிரமுகா் அய்யனூா் கோபி ஆகியோா் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு, 1,200 இலவச தென்னங்கன்றுகள், அன்னதானம் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்வகணபதி தலைமையில் மகுடஞ்சாவடி ஒன்றியப் பொறுப்பாளா் பச்சமுத்து, பொதுக் குழு உறுப்பினா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தப்பக்குட்டை ஊராட்சி முன்னாள் செயலாளா் அய்யாவு, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மேட்டூா்...

சேலம் மேற்கு மாவட்ட விவசாய அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சிக்கு நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் கே.எம்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சேலம் மேற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பி.பொன்னுசாமி வரவேற்றாா். விழாவில் 2,500 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

பி.என். பட்டி பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவா் பொண்ணுவேல் தலைமை வகித்தாா். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி திமுக கொடியேற்றினாா். பி.என். பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் குமாா், நங்கவள்ளி ஒன்றிய துணைச் செயலாளா் கோகிலா குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.