மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

வாழப்பாடி அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:29 pm

DIN

வாழப்பாடி அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த பேளூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (29). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சிவகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து சிவகுமாா் மகன் அஜய்பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.