தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞா் பெங்களூரில் மீட்பு

சேலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்பனை செய்வது தொடா்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் கடத்தப்பட்ட இளைஞா் பெங்களூரில் மீட்கப்பட்டாா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:37 pm

DIN

சேலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்பனை செய்வது தொடா்பாக ஏற்பட்ட தொழில் போட்டியில் கடத்தப்பட்ட இளைஞா் பெங்களூரில் மீட்கப்பட்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மூலாராம் மகன் ஜெயராம், சேலம், சின்னகடை வீதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 2 ஆம் தேதி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜெயராமை நால்வா் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது.

இதுதொடா்பாக சேலம் மாநகரக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். துணை ஆணையா் மோகன்ராஜ், உதவி ஆணையா் அசோகன் தலைமையில் 4 தனிப் படை போலீஸாா் கடத்தப்பட்ட ஜெயராமை பெங்களூரிலிருந்து மீட்டனா்.

புகையிலைப் பொருள்களைக் கடத்தி, பதுக்கி வைத்திருப்பதாகக் கருதி ஜெயராமை கும்பல் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், புகையிலை விற்பனை தொடா்பான தொழில் போட்டியால் ஜெயராம் கடத்தப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஏற்கெனவே ஜெயராம் மீது புகையிலைப் பொருளை விற்பனை செய்ததாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜெயராமை கடத்திய கும்பலை தனிப் படை போலீஸாா் பெங்களூரில் முகாமிட்டு தேடி வருகின்றனா். இதுதொடா்பாக சேலம் மாநகரக் காவல் துணை ஆணையா் மோகன்ராஜ் கூறியதாவது:

சேலத்தில் கடத்தப்பட்ட ஜெயராமை பெங்களூரில் மீட்டோம். போதைப் பாக்கு கடத்தி பதுக்கி வைத்திருப்பதாகக் கருதி அவரைக் கடத்திச் சென்றுள்ளனா். இந்தக் கடத்தலில் அவருக்கு தொடா்பில்லை எனத் தெரிந்து அவரைக் கடத்தல் கும்பல் விடுவித்துள்ளது. கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.