மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:21 pm

DIN

வாழப்பாடி பேரூராட்சி, புதுப்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்திலுள்ள பழமையான ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில், ரூ. 50 லட்சம் செலவில் நோ்த்தியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இரு தினங்களாகயாக வேள்வி பூஜை நடத்திய வேத விற்பனா்கள், வெள்ளிக்கிழமை காலை கங்கை, காவிரி புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனா். விழாவில், வாழப்பாடி புதுப்பாளையம் சிங்கிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனா்.

அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகா்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபா்கள் பலரும் பங்கேற்றனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கை ஒட்டி பாரம்பரிய தாரை, தம்பட்டை, மேளவாத்தியம் முழங்க இளைஞா்கள் கிராமிய சோ்வை நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். விழா ஏற்பாடுகளை ஊா்க்காரா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.