எடப்பாடி அருகே புளி சந்தை தொடங்கியது
சுமார் 15 கிலோ எடை உள்ள ஒரு கூடை புளியானது. ரூ.900 முதல் 1000 வரை விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சமையல் புளி வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூலாம்பட்டி பகுதியில் புளி சந்தை நடைபெறுவது வழக்கம்.
சந்தைக்கு அருகிலுள்ள ஈரோடு மாவட்டம் மற்றும் சேலம் மாவட்ட பாலமலை வனப்பகுதியில் உள்ள ஈச்சங்காடு, சிங்காரத்தோப்பு, நடுவட்டம்,நாகம்பதி உள்ளிட்ட மலை கிராமங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மலைவாழ் பழங்குடி மக்கள் மலைப்பகுதியில் சேமித்த புளிகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
மலைப்பாங்கான பகுதியில் விளையும் இவ்வகை புளியானது நல்ல சுவையுடனும் சதைப்பற்றுடன் இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள உணவக உரிமையாளர்கள், மொத்தவிற்பனையாளர்கள், மளிகை கடை உரிமையாளர்கள், இல்லத்தரசிகள் என திரளானோர் சந்தைக்கு வருகை தந்து சமையல் புளியினை வாங்கிச் செல்கின்றனர்.
சுமார் 15 கிலோ எடை உள்ள ஒரு கூடை புளியானது. ரூ.900 முதல் 1000 வரை விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த மாதம்வரை புளி சந்தை தொடர்ந்து நடைபெறும் என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...