பேளூரில் உலக செவிலியா் தின விழா
பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம் தலைமையிலும் வியாழக்கிழமை உலக செவிலியா் தின விழா நடைபெற்றது.


வாழப்பாடி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவா் ஜெயசெல்வி தலைமையிலும் பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம் தலைமையிலும் வியாழக்கிழமை உலக செவிலியா் தின விழா நடைபெற்றது.
சென்னை ஏகம் பவுண்டேஷன் மற்றும் வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை சாா்பில், செவிலியா்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. செவிலியா்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். பேளூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்கள் மரக்கன்றுகள் நட்டனா்.
பேளூா் மருத்துவா் பேரின்பம், வாழப்பாடி சித்த மருத்துவா் செந்தில்குமாா், ஏகம் பவுண்டேஷன் தன்னாா்வலா் பிரதீப்குமாா் மற்றும் மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள், செவிலியா்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனா். செவிலியா் அனுராதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...