குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது
குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா
Published on
Updated on
1 min read

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆ.ரேணுகா தலைமை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் சு.ஞானதீபன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக வெள்ளக்கோயில் பாரதியாா் இலக்கிய மன்றத் தலைவா் சு.திருமூா்த்தி, குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி முதல்வா் அ.ஜான்பீட்டா் பங்கேற்றுப் பேசினா். குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளா் எம்.மலா்விழி, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினாா்.

குமாரபாளையம் நகா்மன்ற உறுப்பினா் சத்தியசீலன், துறைத் தலைவா்கள் நா.சரவணாதேவி, கோ.ரூபி, மு.ரகுபதி, உடற்கல்வி இயக்குநா் வெ.பிரியா, ஒருங்கிணைப்பாளா் கோ.கீா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com