பள்ளி மாணவா்களிடையே போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த புதுமுயற்சி: 134 காவலா்களை நியமித்து கண்காணிப்பு
சேலத்தில் பள்ளி மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகர காவல் துறையில் புதிய முயற்சியாக சுமாா் 134 காவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம், நெத்திமேட்டில் உள்ள ஜெயராணி அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்த காவலா் மணிகண்டன்.








