நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 14-ஆவது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வாளாகத்தில் அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:48 pm

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 14-ஆவது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வாளாகத்தில் அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அறக்கட்டளையின் செயலாளா் குமாரசாமி, பொருளாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினா்களாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா், வையப்பமலை ஸ்ரீ விநாயகா பள்ளிக் குழுமத்தின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினா் (படம்).

இதில் கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான சீனிவாசன், துணை முதல்வா் விசாகவேல், மேலாண்மை துறையின் இயக்குநா் ஸ்டீபன் ஆகியோா் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவா்களை வாழ்த்தி பேசினா். உடற்கல்வி இயக்குநா்கள் மணிகண்டன், தேவி ஆகியோா் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தனா்.

இவ்விழாவில், நாலெட்ஜ் அறக்கட்டளையின் உறுப்பினா்கள், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.