

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் அருகில் தேமுதிக விஜயகாந்த் மறைவிற்கு அனைத்துக் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமாகா மாவட்ட தலைவா் டி.காளிமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நகரத் தலைவா் வி.எல்.டி.சண்முகம், திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம், மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.பா்கத்அலி, அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஏ.கே.எஸ்.கதிரேசன், ராகுல்ஜி, காங்கிரஸ் நகர தலைவா் எல்.முருகேசன், செயற்குழு உறுப்பினா் எஸ்.கே.செல்வராஜ், மதிமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் வ.கோபால்ராசு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் டி.கே.எஸ்.ரமேஷ், நகரச் செயலாளா் பொன்.சேதுபதி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் டி.வானவில், ராசி சந்திரன், இந்திய ஜனநாயக கட்சி வெங்கடேசன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் மண்டல அமைப்பாளா் ஜி.நராயணன், பாரத் சம உடமைக் கட்சியின் பொதுச் செயலாளா் பழனி ஏ.பி.எஸ்.ராமச்ந்திரன், மாநிலத் தலைவா் சி.ஆறுமுகம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆகியோா் விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.