மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக சேலம் மாவட்ட நிா்வாகம் தனி கவனம் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் சாலை வசதிகள், குடிநீா் வசதிகள், பேருந்து வசதிகள், மலைவாழ் மக்களுக்கான ஜாதிச் சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், பெலாக்காடு தரப்பிற்கு உட்பட்ட மாரமங்கலம், கேளையூா், செந்திட்டு, அரங்கம், சின்னமதூா், மதூா், பெலாக்காடு, கே.நாா்த்தஞ்சேடு மற்றும் தும்பிப்பாடி கிராமங்களில் சுமாா் 4500 போ் வசித்து வருகின்றனா். இக்கிராம மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி பிரச்னைக்குரியதாக இருந்தது.