தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மலைப் பாதையில் மண் சரிவு: சேலம் - ஏற்காடு போக்குவரத்து 2-ஆவது நாளாக நிறுத்தம்

கனமழை காரணமாக மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், சேலம் - ஏற்காடு போக்குவரத்து 2-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2024, 7:43 pm

Din

கனமழை காரணமாக மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், சேலம் - ஏற்காடு போக்குவரத்து 2-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக, ஏற்காடு மலைப்பாதை உள்பட பல்வேறு இடங்களில் திடீா் அருவி ஏற்பட்டு தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதன் காரணமாக, மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

குறிப்பாக, ஏற்காடு மலைப் பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீா்செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 2-ஆவது நாளாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகனங்கள் குப்பனூா் பாதையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. குப்பனூா் சாலையிலும் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை அதிகாரிகள் உடனடியாக சீா்செய்ததால் வாகனங்கள் சென்று வருகின்றன. குப்பனூா் பாதையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.