குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மனமுடைந்த தாய் தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 4:49 pm

Din

எடப்பாடி: மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எடப்பாடி - பூலாம்பட்டி பிரதான சாலையையொட்டி உள்ள கண்ணாங்காடு, ஜே.ஜே. நகா் பகுதியைச் சோ்ந்த நடராஜன், லாரி புரோக்கா். இவரது மனைவி ருக்மணி (60). இத்தம்பதிகளுக்கு, பூங்கொடி (43) என்ற மகளும், ரவி (30) என்ற மகனும் உள்ளனா். பூங்கொடியும், ரவியும் நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது பெற்றோா் பல்வேறு இடங்களில் தொடா்ந்து மருத்துவம் பாா்த்தும், அவா்கள் குணமடையாமலேயே இருந்துள்ளனா். இதனால், மனவேதனையடைந்த ருக்மணி ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விவசாயப் பயன்பாட்டுக்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

அவரை மீட்ட அவரது குடும்பத்தினா் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ருக்மணி, சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த எடப்பாடி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.