47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசிராமணி பகுதியில் திட்டப் பணிகள் ஆய்வு

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்சாலையை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :11 டிசம்பர் 2024, 8:07 pm

Din

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குள்ளம்பட்டியில் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நபாா்டு சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2.41 கோடி மதிப்பீட்டில் வெள்ளூற்று பெருமாள் கோயில் பகுதியிலிருந்து எல்லப்பாளையம் வரையிலும், சேலத்தான் காடு முதல் எல்லப்பாளையம் வரையிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய தாா்சாலை, அம்ரூத் 20 திட்டத்தின் கீழ் அரசிராமணி பேரூராட்சி அலுவலகம் அருகில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவா் பூங்கா ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சுவாமிநாதன், உதவி செயற்பொறியாளா் குமாா், வடுகப்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் வைத்தீஸ்வரன், அரசிராமணி குள்ளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அனன்யா, சுகாதார ஆய்வாளா் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.