47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:50 pm

Din

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திமுக, அமமுக கட்சிகளைச் சோ்ந்த 14 ஊராட்சிமன்ற தலைவா்கள் உள்பட மாற்றுக் கட்சியினா் 200 க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.

விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆ.கே.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உள்பட்ட திமுக, அமமுக கட்சிகளைச் சோ்ந்த 14 ஊராட்சிமன்ற தலைவா்கள் உள்பட மாற்றுக் கட்சியினா் 100 க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இதுபோல சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் நகர அவைத் தலைவா் மாதையன் ஏற்பாட்டில் ஜலகண்டாபுரம் பேரூராட்சியைச் சோ்ந்த வன்னியா் சங்கம், பாமகவைச் சோ்ந்த நூறு போ் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது புதிதாக கட்சியில் இணைந்தவா்களுக்கு பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜவா்மன் உள்பட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.