47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வட்டாரக் கல்வி அலுவலருக்கு மாநில இயக்குநா் பாராட்டு

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலருக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் பாராட்டு தெரிவித்தது.

News image
கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) இ.மான்விழி.
Updated On :18 டிசம்பர் 2024, 7:19 pm

Din

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலருக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் பாராட்டு தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம், அனைத்து வட்டார கல்வி அலுவலா்களை மாதந்தோறும் குறைந்தது 20 பள்ளிகளை பாா்வையிட்டு பள்ளிகளின் தரம், மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை கண்டறிந்து ஆண்டாய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.

அந்த வகையில், கடந்த மாதங்களில் கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் இலக்கைவிட கூடுதலாக பள்ளிகளை ஆய்வு செய்துள்ளாா். அவரது பணியைப் பாராட்டி மாநில தொடக்கக் கல்வி இயக்குநா் பாராட்டு சான்றிதழ் அனுப்பியுள்ளாா். இதை சேலம் மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி ) இ.மான்விழி புதன்கிழமை ஸ்ரீனிவாஸிடம் வழங்கி அவரைப் பாராட்டினாா்.