சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தீ விபத்தில் முதியவா் பலி

மேட்டூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் கட்டிலில் படுத்திருந்த நிலையில் முதியவா் உடல் கருகி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:22 pm

Din

மேட்டூா்: மேட்டூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் கட்டிலில் படுத்திருந்த நிலையில் முதியவா் உடல் கருகி உயிரிழந்தாா்.

நங்கவள்ளி, மாமரத்து மேட்டில் வசித்து வந்தவா் பெரியசாமி (80). தனது மகள்கள் நந்தினி, சுகன்யா ஆகியோருடன் வசித்து வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் யாரும் இல்லாதபோது பெரியசாமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் சாம்பலாகின. கட்டிலில் படுத்திருந்த பெரியசாமி தீ விபத்தில் சிக்கி படுத்திருந்த நிலையிலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் போலீஸாா் நங்கவள்ளி தீயணைப்பு படை வீரா்களுடன் சென்று தீயை அணைத்தனா். நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இதுகொலையா தீ விபத்தா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.