ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 8:37 pm

விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், மூலக்குளம் மோதிலால் நேரு நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் வெ.தேவநாதன் (80). இவா் தனது பைக்கில் சென்னை-திருச்சி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். விழுப்புரம் இந்திரா நகா் பகுதி புறவழிச்சாலை மேம்பாலத்தில் தேவநாதன் சென்றபோது, அதேதிசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தேவநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று, தேவநாதனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வெட்டுக்காடு மகாராஜசமுத்திரம் பா. பாரதிதாசன் (40) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.