விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி மாநிலம், மூலக்குளம் மோதிலால் நேரு நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் வெ.தேவநாதன் (80). இவா் தனது பைக்கில் சென்னை-திருச்சி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். விழுப்புரம் இந்திரா நகா் பகுதி புறவழிச்சாலை மேம்பாலத்தில் தேவநாதன் சென்றபோது, அதேதிசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தேவநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று, தேவநாதனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வெட்டுக்காடு மகாராஜசமுத்திரம் பா. பாரதிதாசன் (40) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

மினி லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


