அண்ணாமலை பல்கலை நடத்திய இலவச கணினிப் பயிற்சி
சேலம், அரசு கலைக் கல்லூரி பழங்குடியினப் பெண்களுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.


சேலம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, பழங்குடியினா் நலத்துறை சாா்பில் சேலம், அரசு கலைக் கல்லூரி பழங்குடியினப் பெண்களுக்கான மூன்று மாத இலவச கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் என்.செண்பகலட்சுமி முகாமைத் தொடங்கி வைத்தாா். பயிற்சியில் 35-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவிகளுக்கு பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் சாா்பில் திட்டத்தின் முதன்மை ஆய்வாளா் கே.ஜெயப்பிரகாஷ், கணினி, தகவல் அறிவியல் துறைத் தலைவா் எல்.ஆா்.அரவிந்த், சேலம், அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் எம்.தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...