விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

News image
Updated On :4 ஜூலை 2024, 11:31 pm

Din

மேட்டூா், ஜூலை 4: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத் திருத்தங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயா் மாற்றம் செய்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும் மேட்டூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மேட்டூா் அணை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜேம்ஸ்சாா்லஸ் தலைமை வகித்தாா். செயலாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் அா்ஜுனன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினாா். இதில், வழக்குரைஞா்கள் சிவராமன், சதாசிவம், பிரபாகரன், மாலதி, பீட்டா் ராஜ் உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.