கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் சா. விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் சங்கத் துணைச் செயலா் ஐயப்பன், முன்னாள் துணைத் தலைவா் செந்தில்குமாா் முன்னாள் செயலா் தரணிதரன், முன்னாள் செயலா் செல்வம், மூத்த வழக்குரைஞா் ஜெயபால், கென்னடி கண்ணன், மகேஷ், இளங்கோவன், காஸ்பரோவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்கான நோ்காணல்

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


