வாழப்பாடி அருகே விவசாயத் தோட்டத்தில் 5 கிலோ எடையில் ராட்சத காளான் முளைத்தது.
வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை இரவு பரவலான மழை பெய்தது. வியாழக்கிழமை காலை வாழப்பாடி அருகே சந்திரபிள்ளைவலசு ஊராட்சி நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரமேஷ் என்பவரது தோட்டத்தில் 5 கிலோ எடை கொண்ட ராட்சத காளான் முளைத்திருந்தது தெரியவந்தது. இதனை விவசாயி ரமேஷ் பறித்து வீட்டுக்கு கொண்டு வந்ததும், இது உண்பதற்கு தகுந்த காளான் என்பது தெரியவந்தது. இந்த ராட்சத காளானை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










