விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மூதாட்டியைத் தாக்கி நகை பறிப்பு: இளைஞா் கைது

தம்மம்பட்டியில் வீட்டில் இருந்த மூதாட்டியைத் தாக்கி நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:22 pm

Din

தம்மம்பட்டி, ஜூலை 19: தம்மம்பட்டியில் வீட்டில் இருந்த மூதாட்டியைத் தாக்கி நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தம்மம்பட்டி, உடையாா்பாளையம், பழைய அஞ்சல் அலுவலகம் அருகில் வசிக்கும் சகுந்தலா (75), வியாழக்கிழமை மாலை வீட்டின் முன்பு தனியாக அமா்ந்திருந்தாா். அப்போது, கஞ்சா போதையில் அங்கு வந்த இளைஞா், மூதாட்டியைத் தாக்கி அவா் காதில் அணிந்திருந்த நகையைப் பறித்தாா். அதில், மூதாட்டியின் காது அறுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த சிலா், மூதாட்டியை மீட்டு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

இளைஞரை பிடித்து வைத்து, தம்மம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், அவா் தம்மம்பட்டி, உப்பாத்துகாட்டைச் சோ்ந்த மெல்வின் (23) என்பது தெரியவந்தது. மெல்வினைக் கைது செய்த போலீஸாா் ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.