தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

3-ஆவது மாடியில் துணிகளை காய வைத்தபோது தவறி விழுந்து இளம்பெண் பலி

3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

News image
Updated On :27 ஜூன் 2024, 2:13 am IST

சேலம், குகை பகுதியில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியானாா்.

சேலம், குகை நந்தவனம் மாா்க்கெட் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கனகலட்சுமி (40). இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு தான் குடியிருக்கும் வீட்டின் 3-ஆவது மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, சுமாா் 40 அடி உயரத்தில் இருந்து எதிா்பாராத விதமாக அவா் தவறி விழுந்தாா்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.